Thursday, November 27, 2014

ஓட்டை சட்டி...

 
ஓர் உழவருக்கு மலை மீது வீடு இருந்தது. அவர் ஒரு குச்சியின் இரு முனைகளிலும் இரு பானைகளைக் கட்டி தினமும் கீழே சென்று தண்ணீர் எடுத்து வருவது வழக்கம்.

ஒரு நாள் ஒரு பானையில் மட்டும் ஓட்டை விழுந்துவிட்டது. இதனால் ஒரு பானையில் தண்ணீர் முழுமையாக கொண்டுசெல்ல முடியவில்லை. அதற்காக அந்தப் பானையை மாற்றவில்லை. அதையே பயன்படுத்தி வந்தான்.

ஒரு நாள் அந்தப் பானை உழவனரப் பார்த்து, 'என்னால் உன் நேரமும் உழைப்பும் வீணாகிறது. என்னால் நீ முழுமையாகத் தண்ணீர் கொண்டுவர முடியவில்லை’ என்று சொன்னது. அதற்கு அந்த உழவன். 'நீ பழுதாகிவிட்டாய் என்பதற்காக நான் வருத்தப்படவில்லை. வழியை மட்டுமே மாற்றினேன். அதனால் நான் வந்த வழி நெடுகப் பார்... உன்னால் எவ்வளவு புற்கள், செடி, கொடிகள் செழிப்பாக வளர்ந்து பூத்து குலுங்குகின்றன’ என்று அந்தப் பானையிடம் சொன்னார்.

பானை மகிழ்ச்சியடைந்தது...

No comments:

Post a Comment