Wednesday, May 21, 2014

ஜெய்சங்கர் - உயர்ந்த உள்ளம்


தான் சம்பந்தப்பட்ட எந்த ஒரு விசேஷமென்றாலும், அதை ஆதரவற்றோர், அநாதை இல்லங் களில் கொண்டாடுகிற வழக்கம் ஜெய்சங்கருக்கு உண்டு. அநாதைக் குழந்தைகளுக்கான விருந்தைப் பிரபலமானவர்கள் கையால் பரிமாற வைப்பாராம்.

''எல்லாச் செலவுகளையும் நீங்க பண்ணிட்டு, அதை ஏன் அவங்க கையால தரச் சொல்றீங்க?'' என்று ஒரு நண்பர் கேட்டபோது, 

''நான் கூப்பிட்டு வர்ற வி.ஐ.பி-க் கள் யாரும் இந்த மாதிரி இடங்களுக்கு இதுவரைக்கும் வந்திருக்க மாட்டாங்க. அதனால, இது ஒரு வாய்ப்பா இருந்து, இந்த உதவி அவங்கள்ல சிலர் மனசைத் தொட்டாக்கூடப் போதும்... நாளைக்கு அவங்களும் இதுமாதிரி உதவிக ளைச் செய்ய என் முயற்சி ஒரு தூண்டுதலா அமையும் இல்லியா, அதுக்காகத்தான்!'' என்றாராம் ஜெய்சங்கர்
Courtesy: Vikatan EMagazine

No comments:

Post a Comment